தேவை :
கேழ்வரகு -1 ஆழாக்கு
சின்ன வெங்காயம் - 2 கைபிடி மெலிதாக வெட்டியது
தேங்காய்- 1/2 மூடி (துருவல் அல்லது பல் பல்லாக வெட்டியது )
பச்சை மிளகாய் - 2 அல்லது 3 மெலிதாக வெட்டியது
முருங்கை கீரை - 2 அல்லது 3 கைபிடி
எண்ணெய்
- கேழ்வரகை 3 மணி நேரம் உறவைத்து அரைக்கவும்.
- அரைத்த மாவுடன் வெங்காயம், மிளகாய் , தேங்காய் , முருங்கை கீரை, உப்பு சேர்த்து நன்றாக் கலக்கவும் .
- தோசை கல்லை காய வைத்து மெல்லிய அடைகளாய் தட்டவும் . கொஞ்சமாக எண்ணெய் விட்டு , இரண்டுபுறமும் திருப்பி போட்டு வேகவைக்கவும். தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும் .
கேழ்வரகு மாவு என்றால் மாவில் சிறிது வென்னீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும் .
முருங்கைகீரைக்கு பதில் காரட் , முட்டைகோஸ் ,பீட்ரூட் போன்ற காய்களை துருவி சேர்த்து செய்யலாம்
No comments:
Post a Comment