தேவை :
- சாமை அரிசி - 1 ஆழாக்கு
- தேங்காய் துருவல் - 1/2 மூடி
- பெரிய வெங்காயம் -1 அல்லது சின்ன வெங்காயம் - 1 கைபிடி
- பச்சை மிளகாய் / வர மிளகாய்- 2/3( நீளமாக வெட்டவும்)
- கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
- கடுகு, உளுந்த பருப்பு - 1 டி ஸ்பூன்
- நல்ல எண்ணெய் அல்லது
- கறிவேப்பிலை , கொத்தமல்லி
- பெருங்காயம்
- உப்பு
சாமை அரிசி சமைப்பது எப்படி ?
சாமை அரிசியை கழுவி கல் அறிக்கவும். ஒரு பங்கு சாமைக்கு 2 பங்கு தண்ணீர் எடுத்து கொதிக்க வைக்கவும் . தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் சாமை அரிசியை சேர்த்து வேகவைத்தால் சாமையரிசி சோறு தயார். இதை கொண்டு நாம் வழக்கமாக அரிசியில் செய்யும் அணைத்து வகையான கலவை சோறும் செய்யலாம். அல்லது சாம்பார் , ரசம், மோர் ஊற்றியும் சாப்பிடலாம்.
சாமை அரிசி தேங்காய் சோறு:
- எண்ணையை சுட வைத்து கடுகு, உளுந்த பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
- கடுகு பொரிந்தவுடன் பச்சை மிளகாய் / வர மிளகாய், மெலிதாக வெட்டிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியவுடன் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.
- இத்துடன் சாமை அரிசி சோறு , உப்பு சேர்த்து கிளறவும். அணைத்தும் நன்றாக கலந்தவுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
- தொட்டு கொள்ள அணைத்து வருவல்களும் பொருத்தமாக இருக்கும் .
குறிப்பு :
அணைத்து சிறு தானியகளிலும் பொடி கற்கள் இருக்கிறது. அறித்து பயன்படுத்துதல் நன்று.
cooker பயன்படுத்த தேவையில்லை. உப்புமா செய்வது போல் பத்திரத்தில் சமைத்தால் போதும். விரைவாக வெந்துவிடும் . (கம்பு ,கேழ்வரகு தவிர)