Tuesday, June 30, 2015

ஆவாரம் பூவும் கூட்டு பூழுவும்...


ஆவாரம் பூவின் இந்த பொண் மஞ்சள் நிறம் என்னை மிகவும் கவர்ந்த நிறம் , இதே நிறம் கொண்ட சரகொன்றை பூக்களையும் மிகவும் பிடிக்கும்.
தை மாதத்தில் இந்த பூக்கள் பூக்க தொடங்கும் என்று நினைகிறேன். தை பொங்கல் அன்று ஆவாரம் பூ , கூழை பூ, வேப்பிலை மூற்றையும் வாசல் படியில் கட்டுவோம்.

எங்கள் ஊரில் ஐயன் வாய்கால் கரையில் இந்த பூக்கள் நிறைய இருந்தாலும் பறிக்க சந்தர்ப்பம் அமைந்தது இல்லை.குளியல் பொடிக்கு தேவையான பூக்களை நாட்டு மருந்து கடையில் வாங்கிகொள்வோம்.  

இந்த முறை ஊரில் இருந்து வரும் போது  வழியில் இந்த பூக்களை பார்த்தேன்.  ''ஆவாரை பூத்திருக்க சாவாரை பார்த்து உண்டா''  என்று எங்கள் அம்மச்சி சொல்வார்கள். சரி சில பூக்கள் பறித்து கொள்வோம். தேநீர் போட்டு குடித்து பார்க்கலாம்( தொலைக் காட்சியில் ஒருத்தர் சாம்பார் கூட வைத்தார்)  என்று பறிக்க தொடங்கினேன். அப்போது அம்மா " நாங்கள்யெல்லாம் ஆற்றில் குளிக்கும் போது ஆவாரம் இலைகளை கல்லில் அரைத்து தலைக்கு குளிப்போம் " என்று  சொன்னது  ஞாபகம் வந்தது. பூக்களாக பறிக்கவும் நேரம் எடுத்து,எனவே கொஞ்சம் இலைகளோடு பறித்து கொண்டேன்.


வீட்டிற்கு வந்து பூக்களை பறித்த போது, இந்த கூட்டு புழு இருந்தது. இதை போன்ற கூட்டு புழுக்களை அம்மா வீட்டில் பார்திருக்கிறேன். வெளி திண்ணை சுவற்றில் இருக்கும். அங்கு மிதியடியில் இருக்கும் தென்னை நரைக்கொண்டு கூடூ அமைத்து இருக்கும்.இதை பார்த்த போது இந்த பூச்சி அதன் சுற்றுபுறத்தில் இருக்கும் பொருள்களை கொண்டு கூடு அமைக்கிறது என்று புரிந்தது. இது இவை உயிர் பிழைக்க கடைபிடிக்கும் உத்தி என்று நினைக்கிறேன். இயற்கையின் சிறந்த படைப்புக்களில் இதுவும் ஒன்று. இந்த கூட்டு புழுக்களை மட்டும் தான் பார்திருக்கிறேன் , இது என்ன பூச்சியாக மாறும் என்று எனக்கு தெரியாது. இந்த புழுவை இங்கு விட்டால் பிழைக்குமா என்றும்  தெரியவில்லை.

 ஆவாரம் பூதேநீர் அடுத்த பதிவில்...

கம்பங்கூழ்



முதல் நாள் இரவு ஊர வைத்த கம்புச்சோறை தேவைக்கு ஏற்ப ஒன்று அல்லது இரண்டு உருண்டைகளை எடுத்து ஊர வைத்த தண்ணீரை ஊற்றி உப்பு போட்டு கரைத்து குடிக்கலாம். தேவைப்பட்டால் மோர் சேர்த்துக்கொள்ளலாம். தொட்டுக்கொள்ள சின்ன வெங்காயம், மோர் மிளகாய், ஊறுகாய், சுண்ட குழம்பு நன்றாக இருக்கும். சிலர் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கம்பங்கூழ்ழோடு கலந்து குடிப்பார்கள். எனக்கு சின்ன வெங்காயத்தை கடித்துக்கொள்ள பிடிக்கும். 
படத்தில்  கம்பங்கூழ், காலிபிளவர் வறுவல், சின்ன வெங்காயம்

மீதம் இருக்கும் கம்பு உருண்டைகள் முழுகும் அளவிற்க்கு தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் பயன்படுத்தலாம். இரண்டு நாள் வரை வைத்துப்பயன்படுத்தலாம் அதற்கு மேல் ஆனால் புளித்து விடும்.


Related Posts Plugin for WordPress, Blogger...