Monday, December 2, 2013

சாமை அரிசி தேங்காய் சோறு


தேவை :
  • சாமை அரிசி   - 1 ஆழாக்கு 
  • தேங்காய் துருவல் - 1/2 மூடி 
  • பெரிய வெங்காயம் -1 அல்லது சின்ன  வெங்காயம் - 1 கைபிடி
  • பச்சை மிளகாய்  / வர மிளகாய்- 2/3( நீளமாக  வெட்டவும்)
  • கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் 
  • கடுகு,  உளுந்த பருப்பு - 1 டி ஸ்பூன் 

  • நல்ல எண்ணெய் அல்லது
         தேங்காய் எண்ணெய்        - 2/3  டி ஸ்பூன்
  • கறிவேப்பிலை , கொத்தமல்லி 
  • பெருங்காயம் 
  • உப்பு 
 சாமை அரிசி சமைப்பது எப்படி ?  


             சாமை அரிசியை கழுவி கல் அறிக்கவும்.  ஒரு பங்கு சாமைக்கு 2 பங்கு தண்ணீர் எடுத்து கொதிக்க வைக்கவும் . தண்ணீர்  நன்றாக கொதித்தவுடன் சாமை அரிசியை சேர்த்து வேகவைத்தால் சாமையரிசி சோறு தயார். இதை கொண்டு நாம் வழக்கமாக அரிசியில் செய்யும் அணைத்து வகையான கலவை சோறும் செய்யலாம். அல்லது சாம்பார் , ரசம், மோர் ஊற்றியும் சாப்பிடலாம்.

சாமை அரிசி தேங்காய் சோறு:
  • எண்ணையை சுட வைத்து  கடுகு,  உளுந்த பருப்பு, கடலை பருப்பு,  கறிவேப்பிலை, பெருங்காயம்  சேர்த்து தாளிக்கவும்.  
  •  கடுகு பொரிந்தவுடன்  பச்சை மிளகாய்  / வர மிளகாய், மெலிதாக வெட்டிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  •  வெங்காயம் வதங்கியவுடன் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.
  •  இத்துடன் சாமை அரிசி சோறு , உப்பு சேர்த்து கிளறவும். அணைத்தும் நன்றாக கலந்தவுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.    
  • தொட்டு  கொள்ள   அணைத்து வருவல்களும் பொருத்தமாக இருக்கும் .
 குறிப்பு :
அணைத்து சிறு தானியகளிலும் பொடி  கற்கள் இருக்கிறது. அறித்து பயன்படுத்துதல் நன்று. 
cooker பயன்படுத்த தேவையில்லை. உப்புமா செய்வது போல் பத்திரத்தில் சமைத்தால் போதும். விரைவாக வெந்துவிடும் . (கம்பு ,கேழ்வரகு தவிர)



                

                

Related Posts Plugin for WordPress, Blogger...