சற்று நீண்ட இடைவெளிக்கு பிறகு... தமிழில் எழுத எனக்கு
நேரம் அதிகம் எடுப்பதால், குறிப்புகள், படங்கள் இருந்தும் இந்த இடைவெளி.
இந்த பதிவு திணை
இட்லி செய்வது பற்றி…
படத்தில் திணை
இட்லி+ சௌசௌ சட்னி
தேவையான பொருள்கள்;
திணை- கால் படி(400 gm approx)
உளுந்து- 1 வீசம்படி
(100 gm approx)
வெந்தயம்- 1 மேசைக்கரண்டீ
செய்முறை;
- திணை, உளுந்து, வெந்தயம் அனைத்தையும் கழுவி தனிதனியாக 2 அல்லது 3 மணி நேரம் தேவையான தண்ணீர் சேர்த்து ஊர வைக்கவும்.
- முதலில் வெந்தயத்தை அது ஊறிய தண்ணீரையும் சேர்த்து அரைக்கவும். வெந்தயம் அரைந்ததும், உளுந்து சேர்த்து, லேசாக தண்ணீர் தெளித்து மைய அரைத்து எடுக்கவும்.
- பிறகு திணையை தேவையான அளவு மட்டும் தண்ணீர் சேர்த்து சற்று கொறகொறப்பாக அரைத்து எடுக்கவும்
- அரைத்த உளுந்து மாவு, தினை மாவுடன், கல் உப்பு சேர்த்து கரைத்து புளிக்க வைத்து இட்லி சுடவும். காலையில் அரைத்து மாலையில் சுடலாம், அல்லது மாலையில் அரைத்து மறு நாள் காலை சுடலாம்
குறிப்பு;
- இதில் கவனிக்க வேண்டியது மாவின் பதம். சற்று கெட்டியாக இருந்தால் தான் இட்லி நன்றாக வரும், இல்லை என்றால் இட்லி அரைந்து விடும்.
- சூடாக சாப்பிட்டால் தான் சுவையாக இருக்கும், ஆறினால் கல் போல ஆகிவிடும் .
- இதே போல், திணைக்கு பதில் சாமை அரிசி, வரகு அரிசி, குதிரைவாலி, கேழ்வரகு கொண்டும் இட்லி சுடலாம்.
No comments:
Post a Comment