தேவையான பொருள்கள் :
கம்பு - 1 ஆழாக்கு
உளுந்து -1/4 ஆழாக்கு
தனியா, சீரகம் - சிறிதளவு
வர மிளகாய் - 4 அல்லது 5
பெரிய வெங்காயம்- 2 அல்லது சின்ன வெங்காயம் 1 கைபிடி
செய்முறை :
- 4 பங்கு கம்புக்கு 1 பங்கு உளுந்து சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
- ஊறிய பின் கம்பு , உளுந்து, தனியா, சீரகம், வர மிளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து சற்று கொரகொரபாக அரைக்கவும். இந்த மாவை புளிக்க வைக்க வேண்டாம், அரைத்தவுடன் தோசை ஊற்றலாம்.
- நல்ல எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றி தோசை சுட்டால் சுவையாக இருக்கும். தேங்காய் சட்னியுடன் மிகவும் சுவையாக இருக்கும்.
மாவு கொரகொரபாக இருந்தால் தான் கம்பு தோசை ருசியாக இருக்கும். இத்துடன் முருங்கை கீரை அல்லது காரட் , முட்டைகோஸ், பீட்ரூட் போன்ற காய்களை துருவி சேர்த்து அடை போலவும் செய்யலாம் .