Sunday, March 30, 2014

நெல்லிக்காய் சாதம்



தேவை :
பெரிய நெல்லிக்காய்- 2
சாதம்  - 1 கப் ( approx. 200gm கொண்டு வடித்த சோறு)
வர  மிளகாய் -2
தளிக்க : நல்ல எண்ணெய் 3 Tbsp , கடுகு 1tsp , உளுந்த பருப்பு 1tsp  , பெருங்காயம் 1/4 tsp       கறிவேப்பிலை - 1 ஈர்க்கு  , கொத்தமல்லி தழை  சிறிது  

செய்முறை:

  1.  சாதத்தில் 2Tbsp எண்ணெய் ஊற்றி ஆறவைக்கவும்.
  2. நெல்லிக்காய் விதை நீக்கி, மிளகாய் , கல் உப்பு  சேர்த்து அரைக்கவும்.
  3. அடுப்பில் 1 Tbsp நல்ல எண்ணெய் சுட வைத்து , கடுகு, உளுந்த பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு பொரிந்த உடன்  பெருங்காயம் ,  கறிவேப்பிலை, அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.  
  4. இதை சற்று ஆறவைத்த சோற்றில் சேர்த்து கிளறவும்.
  5. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். 

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...