Tuesday, September 29, 2015

இயற்கையில் எந்தனை வண்ணம்















இத்தனை  வண்ணத்தில் வெட்டுக்கிளி பார்ப்பது இதுதான் முதல்முறை. பச்சை நிறத்திலும், மர நிறத்திலும் சிலமுறை மஞ்சள் நிறத்தில் சிறிய வெட்டுக்கிளிகளை  மட்டுமே பார்த்திருக்கிறேன். இன்று மகளை
பள்ளியிலிருந்து  அழைத்து வரும்போது பட்டாம்பூச்சிகளை வேடிக்கை பார்த்துகொண்டு வந்தோம், அப்போது இந்த  வெட்டுக்கிளிகள் எருக்கம் பூ செடியில்  இருந்தன. 

Tuesday, June 30, 2015

ஆவாரம் பூவும் கூட்டு பூழுவும்...


ஆவாரம் பூவின் இந்த பொண் மஞ்சள் நிறம் என்னை மிகவும் கவர்ந்த நிறம் , இதே நிறம் கொண்ட சரகொன்றை பூக்களையும் மிகவும் பிடிக்கும்.
தை மாதத்தில் இந்த பூக்கள் பூக்க தொடங்கும் என்று நினைகிறேன். தை பொங்கல் அன்று ஆவாரம் பூ , கூழை பூ, வேப்பிலை மூற்றையும் வாசல் படியில் கட்டுவோம்.

எங்கள் ஊரில் ஐயன் வாய்கால் கரையில் இந்த பூக்கள் நிறைய இருந்தாலும் பறிக்க சந்தர்ப்பம் அமைந்தது இல்லை.குளியல் பொடிக்கு தேவையான பூக்களை நாட்டு மருந்து கடையில் வாங்கிகொள்வோம்.  

இந்த முறை ஊரில் இருந்து வரும் போது  வழியில் இந்த பூக்களை பார்த்தேன்.  ''ஆவாரை பூத்திருக்க சாவாரை பார்த்து உண்டா''  என்று எங்கள் அம்மச்சி சொல்வார்கள். சரி சில பூக்கள் பறித்து கொள்வோம். தேநீர் போட்டு குடித்து பார்க்கலாம்( தொலைக் காட்சியில் ஒருத்தர் சாம்பார் கூட வைத்தார்)  என்று பறிக்க தொடங்கினேன். அப்போது அம்மா " நாங்கள்யெல்லாம் ஆற்றில் குளிக்கும் போது ஆவாரம் இலைகளை கல்லில் அரைத்து தலைக்கு குளிப்போம் " என்று  சொன்னது  ஞாபகம் வந்தது. பூக்களாக பறிக்கவும் நேரம் எடுத்து,எனவே கொஞ்சம் இலைகளோடு பறித்து கொண்டேன்.


வீட்டிற்கு வந்து பூக்களை பறித்த போது, இந்த கூட்டு புழு இருந்தது. இதை போன்ற கூட்டு புழுக்களை அம்மா வீட்டில் பார்திருக்கிறேன். வெளி திண்ணை சுவற்றில் இருக்கும். அங்கு மிதியடியில் இருக்கும் தென்னை நரைக்கொண்டு கூடூ அமைத்து இருக்கும்.இதை பார்த்த போது இந்த பூச்சி அதன் சுற்றுபுறத்தில் இருக்கும் பொருள்களை கொண்டு கூடு அமைக்கிறது என்று புரிந்தது. இது இவை உயிர் பிழைக்க கடைபிடிக்கும் உத்தி என்று நினைக்கிறேன். இயற்கையின் சிறந்த படைப்புக்களில் இதுவும் ஒன்று. இந்த கூட்டு புழுக்களை மட்டும் தான் பார்திருக்கிறேன் , இது என்ன பூச்சியாக மாறும் என்று எனக்கு தெரியாது. இந்த புழுவை இங்கு விட்டால் பிழைக்குமா என்றும்  தெரியவில்லை.

 ஆவாரம் பூதேநீர் அடுத்த பதிவில்...

கம்பங்கூழ்



முதல் நாள் இரவு ஊர வைத்த கம்புச்சோறை தேவைக்கு ஏற்ப ஒன்று அல்லது இரண்டு உருண்டைகளை எடுத்து ஊர வைத்த தண்ணீரை ஊற்றி உப்பு போட்டு கரைத்து குடிக்கலாம். தேவைப்பட்டால் மோர் சேர்த்துக்கொள்ளலாம். தொட்டுக்கொள்ள சின்ன வெங்காயம், மோர் மிளகாய், ஊறுகாய், சுண்ட குழம்பு நன்றாக இருக்கும். சிலர் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கம்பங்கூழ்ழோடு கலந்து குடிப்பார்கள். எனக்கு சின்ன வெங்காயத்தை கடித்துக்கொள்ள பிடிக்கும். 
படத்தில்  கம்பங்கூழ், காலிபிளவர் வறுவல், சின்ன வெங்காயம்

மீதம் இருக்கும் கம்பு உருண்டைகள் முழுகும் அளவிற்க்கு தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் பயன்படுத்தலாம். இரண்டு நாள் வரை வைத்துப்பயன்படுத்தலாம் அதற்கு மேல் ஆனால் புளித்து விடும்.


Wednesday, May 20, 2015

கம்பு சோறு/ கம்பங் களி

படத்தில் : கம்பு சோறு , கத்தரிக்காய், நில கடலை  புளி குழம்பு

வெயில் தொடங்கி விட்டால், வீட்டில் அடிக்கடி  கம்பு சோறு செய்வோம். எனக்கு கம்பு சோறு குழம்பு தொட்டு சாப்பிட பிடிக்கும்.  அம்மா அவர்களது சிறு வயதில் கம்பு, சோளம், நெல் எல்லாம் உரலில் இடித்து சோறு செய்த பழக்கம் உண்டு. கம்பு சோறு செய்வதை பற்றி அம்மா அதிகம் விளக்கங்கள் சொல்லி இருந்தாலும்,இதை செய்ய கற்று கொண்டது அத்தையிடம் தான்.

பழைய முறை படி இதை செய்வது பெரிய வேலை, கம்பை இடித்து, புடைத்து, தோல் நீக்கி, மாவை தனியாகவும், குருணையை தனியாகவும் பிரித்து, தண்ணீரை கொதிக்க வைத்து குருணையை போட்டு, அது முக்கால் பதம் வெந்தவுடன், கம்பு மாவை சேர்த்து வேகவைக்க வேண்டும். ஆனால் இப்போது இடிக்க தேவை இல்லை, grinderஇல் அரைத்து சுலபமாக செய்யலாம்.

தேவை :
கம்பு - 1/4 படி
(இந்த முறை நான் பயன்படுத்தியது  நாட்டு கம்பு.   நாட்டு கம்பு தோல்  நீக்குவது சற்று கடினம். லேசாக தண்ணீர் தெளித்து ஊறவைத்து mixiல் pluse modeல் இரண்டு சுற்று சுற்றினால் தோல் வந்துவிடும். புடைத்து  அல்லது நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும். இது பற்றி இன்னொரு பதிவில்  தெளிவாக சொல்கிறேன்  நாட்டு கம்பு தோல் நீக்கப்பட்டு சில கடைகளில் கிடைக்கிறது. விலை கொஞ்சம் அதிகம். கம்பெனி கம்பு என்றால் அப்படியே பயன் படுத்திகொள்ளலாம் . கல் இருந்தால் அரித்து கொள்ளவும்.)

செய்முறை :

  • கம்பை 2 அல்லது 3 மணி நேரம் ஊறவைத்து கொரகொரப்பாக( ஒன்று இரண்டாக ) அரைத்து கொள்ளவும்.   மாவு பதம், தோசை மாவு  போல் சற்று நீர்த்து இருக்க வேண்டும். 
  • அடி கனமான பாத்திரத்தை(cooker without  lid  அடுப்பில் குறைந்த(medium) தீயில் வைத்து மாவை ஊற்றி கை விடாமல் கிளற வேண்டும் . இன்னொரு அடுப்பில் கொஞ்சம் வெந்நீர் வைக்கவும்.




  • சற்று நேரத்தில் மாவு கெட்டியாக தொடங்கும், அப்போது சிறிது வெந்நீர் சேர்த்து கிளறவும். மீண்டும் மாவு கெட்டியாக தொடங்கும், சிறிது வெந்நீர் சேர்த்து கிளறவும்...வெந்நீர் சேர்க்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். மாவு வேக தேவையான நீர் மட்டும் சேர்த்தால்  போதும். மாவு முழுதாக வேகும் வரை இப்படி செய்யவும் (மாவு ஒரு மாதிரி வெள்ளை நிறத்தில் இருந்து சற்று பள பளப்பாக மாறும். opaque  to  translucent ) 



  • மாவு வெந்தவுடன்  அடுப்பை மிகவும் குறைந்த தீயில் (sim ) வைத்து.மூடி போட்டு, 10 நிமிடம் புழுங்க விடவும். தண்ணீரில் கையை நனைத்து  கொஞ்சம் மாவை எடுத்து உருட்டினால் கையில் ஒட்டாமல் உருட்ட வரவேண்டும். இது தான் சரியான பதம். கம்பு சோறு/ கம்பங் களி இப்போது தயார்.


கம்பங் களியை  சூடாக சாம்பார் / புளி குழம்பு  ஊற்றி சாபிடலாம். குறிப்பாக முருங்கை கீரை குழம்புடன் சாப்பிட சுவையாக இருக்கும்.



மீதம் இருக்கும் கம்பங் களியை உருண்டைகளாக உருட்டி, உருண்டைகள் முழுகும் வரை சோறு விடித்த கஞ்சி கொஞ்சம் + தண்ணீரில் போட்டு வைத்து மறு நாள்   கம்பங் கூழாக குடிக்கலாம்.  கம்பங் கூழ் அடுத்த பதிவில்... 
  


குறிப்பு :
  • மாவு அரைப்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஒன்று இரண்டாக அரைத்தால் போதும்.
  • மாவை போல் 3 அல்லது 4 மடங்கு தண்ணீர்( வெந்நீர்) தேவை படும்.
  • 40 or 45 நிமிடம் முழுதாக தேவை படும் இம்முறையில் சமைப்பதற்கு. 






















Monday, March 23, 2015

Color வெல்லம்


வெல்லத்தில் செயற்கை நிறம் சேர்க்கப் படுகிறது என்று படித்து இருக்கிறேன். இப்போது பார்த்து தெரிந்து கொண்டேன். திணை புட்டு செய்வதற்காக வெல்லம் சீவிய போது கிடைத்த காட்சி.... 

Thursday, January 15, 2015

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்


இந்த தை திருநாளில் உங்கள் இல்லங்களில் நிம்மதியும் மகிழ்ச்சியும் பொங்கட்டும்


Tuesday, January 13, 2015

பொங்கல் திருநாள் அன்று வைக்கப்படும் கூட்டு குழம்பு



பொங்கல் அன்று  சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் உடன் தொட்டு கொள்ள குழம்பு வைப்போம் . 7,9,11 என்று ஒற்றை படை எண்ணிகையில், நாட்டு காய்கள் கொண்டு செய்யப்படும் இந்த குழம்பை, கொஞ்சம் கெட்டியாக வைக்கவேண்டும்.
படத்தில் சர்க்கரை பொங்கல் , வெண் பொங்கல் , கூட்டு குழம்பு


தேவை:
 பரங்கி காய் (பரங்கி பிஞ்சு இருந்தால் சுவையாக இருக்கும் , இல்லை என்றால் பழம் ), 1 கிற்று
மொச்சை(உறித்தது)- 2 கைபிடி
கத்திரி காய் - 2
அவரை - 15
சர்க்கரை வள்ளி கிழங்கு-1
 வாழை காய் - 1
உருளை- 1

சின்ன வெங்காயம் - 1 கைபிடி 
தக்காளி - 2
கொத்தமல்லி இலை  - 1  கைபிடி
புளி - 1 எலுமிச்சை அளவு
மிளகாய் தூள் - 1 Tbsp  அல்லது  காரத்துக்கு ஏற்ப
மல்லி தூள்- 1 அல்லது 11/2 Tbsp
மஞ்சள்  தூள்- 1 tsp
கல் உப்பு - சுவைக்கு ஏற்ப
நல்ல எண்ணெய் -  2 or 3 Tbsp

தாளிக்க :
கடுகு - 1/2 tsp
உளுந்து - 1 tsp
வெந்தயம் - 1/2 tsp
சீரகம் - 1 tsp
மிளகு - 1/2 tsp
கறிவேப்பிலை - 1 கைபிடி

 செய்முறை  :
  •  பரங்கி காய்,  சர்க்கரை வள்ளி கிழங்கு, வாழை காய்களை பட்டை சீவி சிறிய துண்டுகளாக வெட்டவும். மற்ற காய்களையும்  இதே போல் சிறிய துண்டுகளாக வெட்டவும்.
  • வெங்காயத்தை தோல் உறித்து இரண்டாக வெட்டவும்.
  • தக்காளியை நீட்ட வாகில் வெட்டவும்.
  •   புளியை கரைத்து வைக்கவும் .
  •  சட்டியில் எண்ணையை காயவைத்து , தாளிக்க கொடுத்த பொருள்களை சேர்க்கவும் .எல்லாம் பொரிந்து, லேசாக சிவந்த பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் லேசாக சிவக்க வேண்டும் .பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும் .தக்காளி வதங்கிய பின் காய்களை சேர்த்து வதக்கவும் . காய்கள் நன்றாக வதங்க வேண்டும். எண்ணெய் போதவில்லை என்றால் இன்னும் கொஞ்சம் உற்றி கொள்ளவும். இப்போது புளி தண்ணீர், மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள்  தூள், கல் உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும் . காய்கறிகள் வெந்து குழம்பு நன்றாக சுண்டிய பின் கொத்தமில்லி இலை போட்டு இறக்கவும்.


    குறிப்பு :
    • காய்கள் நன்றாக வதங்கினால் தான் குழம்பு சுவையாக இருக்கும் .
    • குழம்பு என்று சொன்னாலும், இது சாந்து போல் தான் இருக்க வேண்டும் , அதனால் தண்ணீர் சேர்க்கும் போது அளவாக சேர்க்கவும்.





Related Posts Plugin for WordPress, Blogger...