Saturday, June 29, 2013

கம்பு தோசை




தேவையான பொருள்கள் :
கம்பு - 1 ஆழாக்கு
உளுந்து -1/4 ஆழாக்கு
தனியா, சீரகம் - சிறிதளவு
வர மிளகாய் - 4 அல்லது 5
பெரிய வெங்காயம்- 2 அல்லது சின்ன வெங்காயம் 1 கைபிடி


செய்முறை :
  1. 4 பங்கு கம்புக்கு 1 பங்கு உளுந்து சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. ஊறிய பின்  கம்பு , உளுந்து,  தனியா, சீரகம், வர மிளகாய், வெங்காயம், உப்பு   சேர்த்து  சற்று கொரகொரபாக அரைக்கவும். இந்த மாவை புளிக்க வைக்க வேண்டாம், அரைத்தவுடன் தோசை ஊற்றலாம். 
  3.  நல்ல எண்ணெய்  அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றி தோசை சுட்டால் சுவையாக இருக்கும். தேங்காய் சட்னியுடன் மிகவும் சுவையாக இருக்கும்.
குறிப்பு:
மாவு கொரகொரபாக இருந்தால் தான் கம்பு தோசை ருசியாக   இருக்கும். இத்துடன் முருங்கை கீரை அல்லது  காரட் , முட்டைகோஸ்,  பீட்ரூட் போன்ற காய்களை துருவி சேர்த்து அடை போலவும் செய்யலாம் .

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...