தேவை :
பெரிய நெல்லிக்காய்- 2
சாதம் - 1 கப் ( approx. 200gm கொண்டு வடித்த சோறு)
வர மிளகாய் -2
தளிக்க : நல்ல எண்ணெய் 3 Tbsp , கடுகு 1tsp , உளுந்த பருப்பு 1tsp , பெருங்காயம் 1/4 tsp கறிவேப்பிலை - 1 ஈர்க்கு , கொத்தமல்லி தழை சிறிது
செய்முறை:
- சாதத்தில் 2Tbsp எண்ணெய் ஊற்றி ஆறவைக்கவும்.
- நெல்லிக்காய் விதை நீக்கி, மிளகாய் , கல் உப்பு சேர்த்து அரைக்கவும்.
- அடுப்பில் 1 Tbsp நல்ல எண்ணெய் சுட வைத்து , கடுகு, உளுந்த பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு பொரிந்த உடன் பெருங்காயம் , கறிவேப்பிலை, அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.
- இதை சற்று ஆறவைத்த சோற்றில் சேர்த்து கிளறவும்.
- பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
Good for health. thank for posting
ReplyDelete