அடுப்படியோடு இனைந்த service area உண்டு, அது வழியே குரங்குகள் வீட்டுக்குள் வந்து விடும். அதனால் அந்த கதவை ஆள் இல்லாத போது முடி வைப்போம். நேற்று கனிந்த வாழைப்பழம் ஒன்றை குரங்கு வந்தால் எடுத்து கொள்ளட்டும் என்று சன்னல் அருகே வைத்தேன். மாலையில் பார்த்த போது குருவிகள் கொத்திய தடங்கள் இருந்தன. இன்றும் வைத்து பார்ப்போம் என்று, சின்ன பழம் ஒன்றை வைத்தேன். திருமண நிகழ்வு ஒன்றிற்கு சென்று வந்து பார்த்தால், பழத்தை உண்டு இருகிறார்கள். சில சமயங்களில் தேன் சிட்டுக்கள், கருப்பு சின்னான்கள் வந்து பார்த்துள்ளேன்.. இன்று வந்தது யார் என்று தெரியவில்லை. நாளை கவனித்து பார்க்கிறேன்..
No comments:
Post a Comment